Tuesday, 7 March 2017

சினிமா - 04 -A.

மொழிமாற்றப் படங்கள் [சில பாடல்களும்]

ஹிந்தி - தமிழ்
Image result for Ram Rajya


முதன் முதலாக அமெரிக்காவில் திரையிடப்பட்ட ஹிந்திப் படமான 'ராம் ராஜ்ய' வை [1943 ] தமிழில் மொழிமாற்றம் செய்து 1948இல் வெளியிட்டனர் ஏவிஎம் நிறுவனத்தினர். அதில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் சீதையாக நடித்த ஷோபனா சமர்த்துக்காக [நூடனின்தாயார்] ஒலித்த 'ஊஞ்சல் ஊஞ்சல்'  ஊஞ்சலில் வேகத்தோடு போட்டியிட்டு இனிமை சேர்த்த ஒரு பாடல். இசை - ஹிந்தியில் வியாஸ்; தமிழில் சுதர்சனம்.[ராஜேஸ்வரி பாடிய இரண்டடைவது பாடலது].
                                   சாந்தாராமின் 'ApnaDesh '[1949 ] 'நம் நாடு' என்ற மகுடத்துடன் அதேஆண்டில்[1949]தமிழுக்கு 'டப்பாகி வந்தது. ஹிந்தியில் புருஷோத்தம் இசையமைத்த பாடல்களைத் தமிழில் மாற்ற கோவிந்தராஜுலுவும் பி.ஆர்.ராஜகோபால் அய்யரும் துணை நின்றனர்.
Image result for Aan 1952திலீப்குமார், நிம்மி, பிரேம்நாத், நதீரா  நடிப்பில் ஹிந்தியில்  முதல் Technicolour வண்ணப் படமாக உருவான 'ஆன்' அது வெளியான 1952 யிலேயே தமிழிலும் வெளியானது. பிரபலமான நவ்ஷாத் அலியின்  இசையில் கம்பதாசனின்                                                   அனைத்துப் பாடல்களும் மனதை  வருடிச்சென்றன.எஸ்.எம்.சர்க்காரும் லதா மங்கேஷ்காரும் பாடிய பாடல்கள் HMV இசைத்த தட்டுகளில் சுழல அதே பாடல்கள் ஹுசைன்தீனும், எம்.எஸ்.ராஜேஸ்வரியும் இசைக்க 'கொலம்பியா' இசைத்தட்டுகளிலும் வெளியாகின. .'மோகமுத்தம் தருவாள் மலர்க்கொடியாள்', [கண்ணதாசனின் 'செந்தமிழ் தேன் மொழியாள்'க்கு ஆதர்சமான பாடல்] 'மனதின் மெய்க்காதல்', ஏற்றிடுவாய் அருள்தானே','இன்று எந்தன் நெஞ்சில் சகி', 'இழந்தேன் உன்னை' என அனைத்துப் பாடல்களும் காலத்தால் அழியாதவை! திரைப் படத்தின் தமிழ் உரையாடலை பிரபல எழுத்தாளர் பி.எஸ்.ராமையா எழுதியிருந்தமை கூடுதல் சிறப்பு.
Image result for Aah 1953
1953 இல் நடிகர் ராஜ்கபூர் தயாரித்த  'ஆஹ்' காதல் சித்திரம் 'அவன்' ஆக மொழி மாறி வந்தது. ராஜ்கபூர் நர்கீஸுடன் விஜயலக்ஷ்மியும் நடித்த படமிது.சங்கர் -ஜெய்கிஷனின் இசையில் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடிய அத்தனை பாடல்களுமே கற்கண்டாய் இனித்தன. தமிழ்ப் பாடல் வரிகளின் சொந்தக்காரர் கம்பதாசன். 'கண் காணாததும்',  'அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே', 'கல்யாண் ஊர்வலம் வரும்', 'ஜலக்கு  ஜலக்கு ஜலக்கு ஜலக்கு தண்டையதன் நாதம்', 'உன் பேரைக் கேட்டேன்', 'ஆஹா நானின்றே அறிந்து கொண்டேன்',  'மின்னல் போலாகும் இந்த' - யாவுமே கேட்கத் திகட்டிடாத பாடல்கள்.
                                           Robinhood கதையான 'பாதல்'[1951] என்ற படத்தை பக்ஷிராஜா நிறுவனத்தினர் 'புரட்சி வீரன்' என்ற பெயரில் 1952 இல் தமிழில் தந்தனர். பிரேம்நாத்தும் மதுபாலாவும் இணை சேர்ந்த அப்படத்தில் திருச்சி லோகநாதனும் பி.ஏ. பெரியநாயகியும் இணைந்து இசைத்த 'காதல் பொய்யோ இன்னுமா..'பாடலும் திருச்சி தனியாகப் பாடிய 'மெய்த் தியாகப் புவியிலே வாணாளில்' பாடலும் நினைந்து அசை போட வைப்பவை. 
Image result for Albela 19511951 இல் ஹிந்தியில் வெளியான 'அல்பேலா' தயங்கித் தயங்கி 'நல்ல பிள்ளை'யாக 1955 இல் தான் தமிழாக்கி வந்தது. பகவானும்  கீதா பாலியும் கலந்து வழங்கிய நகைச்சுவைச் சித்திரம். சீ. ராமச்சந்திராவின் இசையில் ஏ.எம்.ராஜாவும் பி. லீலாவும் பாடிய பாடல்கள் இன்றும் காதில் ரீங்கரிப்பவை.' மை  விழிமேல் பாய்ந்து ஓடியே நீ ', ஆம்பிளை நீ ஜன்னல் கிட்டே', 'மணி  அடித்ததனால் அந்த', 'நெஞ்சம் திடுக்கென நிலை தடுமாறி' - துடிக்க வைக்கும்  இன்னிசை கீதங்கள்.
Image result for Uran Khatola                                1953 இல் 'ஆயிரம் விளக்குகள்' தமிழ்த் திரைவானை ஒளியூட்டிட வந்தது. குலாம் மொஹமட்டின் இசையில் ஷம்ஷாத் பேகமும் லட்சுமி ஷங்கரும் பாடிய பாடல்கள் சுமார் ரகம். அதே ஆண்டில் ராஜ்கபூரின் தந்தையாரான பிருதிவிராஜ்கபூர் நடித்து ஹேமந்தகுமார் இசையமைத்த 'ஆனந்தமாட்' தமிழில் 'ஆனந்த மடம்' ஆக மாறி  வந்தது. தாய் நாட்டுப் பற்றை ஊட்டும் சரித்திர படமிது.

1955 இல் ஹிந்தியில் Uran Khatola [உறான் கத்தோல] வாக  திலீப்குமார், நிம்மியின் நடிப்பில் வெற்றி கண்ட திரைப்படம்  1956 இல் 'வானரதம்' ஆகத் தமிழில் பவனி வந்தது. நவ்ஷாத்தின் இசையில் கம்பதாசனின் பாடல்கள் லதா மங்கேஷ்க்கார், T.A .மோதியின் குரல்களில்  வானலைகளில் இதமாகத் தவழ்ந்தன.
'இடர் சூழும் காதலின்', 'நீ நீரோடடாதே','என்னுள்ளம் விட் டே ஓடாதே', 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கிப் போகிறார்', 'என்னைக் கண்டேகுவாய் ''ஓ தியாக யாத்திரைக்காரி' - யாவுமே இனிமையின் ஊர்வலங்கள்.
Image result for Naya Daurதிலீப்குமார்,வைஜயந்திமாலா நடித்த 'நயா தெளர்'[1957 ] தமிழிலும் அதே ஆண்டில்  'பாட் டாளியின் சபதம்' ஆகப் பீடுநடை போட்டது.  ஓ.பி.நய்யாரின் இசைக்கேற்ப பாடல்களைக் கம்பதாசன் புனைந்திருந்தார்.  T.M.S., சுசிலா, சீர்காழி ந்தராஜன் ஆகியோரின் குரல்களில்  'உந்துமுகில்சுருள் எனுமுன் கூந்தல்', 'வாழ்விலுன் கோரிக்கை போலே','வாழ்க பாட்டாளியே', 'நான்பம்பாயின்  பாபு'[JhonyWalker க்காக TMS]] என ஒலித்த பாடல்கள் சோடைபோகாதன.                                    
Image result for Mughal-e-Azam
                            திலீப்குமாரின் நடிப்பில் தமிழில் மொழிமாறி  வெளியான நாலாவது திரைப்படம் 'அக்பர்'. அனார்கலி-சலீம் காதல் கதை. ‘மொகல் ஏ ஆஸம்' என 1961 இல் வெளியானது. அனார்கலியாக அழகுப்பதுமை மதுபாலா; அக்பராக  பண்பட்ட  நடிகர் பிருதிவிராஜ்கபூர். திலீப்பின் 'ஆன்','வானரதம்' படங்களுக்கு இசையமைத்த நவ்ஷாத்தே மீண்டும். கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலம்.  ஆயினும் கம்பதாசனே   வெங்கடராமனுடன் மீண்டும் கைகோத்திருந்தார்.
'கனவு கண்ட காதல்', 'ஆற்றின் கரை தனிலே', 'காதல் கொண்டாலே பயமென்ன?'என பி.சுசிலாவின் குரல் பாகாய்க் கரைந்துருகியது. ராதா+ஜெயலக்ஷ்மியின் குரலில் 'அழகின் நிலா' தமிழ்ப் பதிப்புக்காக  SVV யின் இசைஜாலத்தில் விசேடமாக இணைக்கப்பட்ட பாடல்.


                                    1957 இல் வெளியான Qaidi ' எனும் ஹிந்தித் திரைப்படம் தமிழில் 'மகுடம் காத்த மங்கை' என்கிற மகுடத்துடன் அதே ஆண்டில் வெளியானது. பத்மினியுடன் வடநாட்டு நாயகன் சுரேஷும் ஹெலனும் நடித்திருந்தார்கள். 'ஆஹா என்னைப் பார் மன்னா', 'குறும்பாய் என்னைப் பார்க்காதே', 'உந்தன் காதல் பாதை தனிலே '[மூன்று பாடல்களிலும் குரல் ஜிக்கி]  'ஓ மோகனச் செந்தாமரை' [TA .மோதியும் ஜிக்கியும்] என ஓ.பி.நய்யாரின் இசையில் அமைந்த இனிய கானங்களுக்கு கே.வி.மகாதேவன் மீண்டும் இசை வழங்கியிருந்தார்.
                            கிஷோர்குமார், வைஜயந்திமாலா நடிப்பில் 1957 இல் ஹிந்தியில் வெளியான 'ஆஷா' நாகேஸ்வரராவ், வைஜயந்திமாலா நடிப்பில் 'அதிசய பெண்’ணாக 1959இல் வடிவெடுத்தது. பிரபலமான 'ஈனா  மீனா  டீகா ' பாடல் சீ..ராமசந்திராவின்  இசையில் கலக்கியது. தமிழில்  வி சீதாராமன் கவிபுனைய  எஸ்.எம்.சுப்பையாநாயுடுவின் இசையனுசரணையுடன் மீளுருவாக்கம் பெற்றது.
Image result for hatim tai 1956 movie images                            Hatimtai                              'ஹாதிம்தாய்' என்ற மாயாஜாலப்படம் ஜெயராஜ், ஷகிலா நடிப்பில்                         உருவானது. 'மாய மோகினிஆக 1956 இல் அது தமிழில் தரிசனம் தந்தது.S.N. திருப்பதியின் இசைக்கு இசைவாக தஞ்சை          ராமையாதாசும் புரட்சிதாசனும் பாடல்களைப்புனைந்திருந்தனர்.. ராஜா-ஜிக்கி இணைவில் 'வான்மதியாகியே நாமுலாவலாம்' இருகுரல் கீதமும் T.M.S.பாடிய ‘மறவேனே எந்த நாளும்'நாகூரான் துதிப்பாடலும் நினைவில் நிற்பவை.
Image result for zimbio 1958 hindi movie images                                      சித்ரா - ஆசாத் நடிப்பில் 1958 இல் வெளியான டார்ஸான் வகையறாப் படம்  ' Zimbo  ' அதே பெயரில் தமிழிலும் அதே ஆண்டில் வெளியானது. சித்ரகுப்தாவின் இசையில் [தமிழில் விஜயபாஸ்கர்] பி.சுசிலா பாடிய 'அவர் நினைவும் என் நினைவும்', 'என் நெஞ்சம் உன்னை அகலாது', பாடல்கள் நெஞ்சை விடடகலாதவை.'நம்மாசை என்ற நல்ரோஜா' P.B.S. இன் குரலில் 959ஒலித்த ஆரம்பகாலத் தேன்துளி. பாடலாக்கம் குயிலன்.
                     ஜிம்போவின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி 1960 இல் எடுத்த படம்Zimbo comes to town’. ‘ நகரத்தில் ஜிம்போ'வாக  1961 இல் அது தமிழில் பிரவேசம் செய்தது.கே.ஜமுனாராணியின் தேன் குரலில் 'மோகம் பிறந்திடாதா', வும்  'நெஞ்சில் நிறைந்த வீரா'வும் சித்ரகுப்தாவின் துள்ளிசைத்  தூறல்கள்.
Image result for 1960 hindi movie zabak images                                                     மஹிபால் -ஷகிலா ஜோடியாக நடித்த  'Zabac' -' ஸபக்'[1960 ] தமிழில் 'அரபு நாட்டு அழகி'யாக மாறி 1961 இல் வெளியானது. 'உன் அன்பைத் தேடுகின்றேன் மாது எந்தன் மாரன் வா வா', 'கண்ணீர் துளியால் நெஞ்சம்' AMR/PS   குரலில் குளித்து வந்த குளிர்ச்சியான பாடல்கள். திருப்பதியின் இசை: தமிழில் விஜயபாஸ்கர்.
மகிபால் காமினி கௌசலுடன் சேர்ந்து நடித்த சாகஸப்படம் Circus Sundari    1958  இல் ஹிந்தியில் வெளியானது. தமிழிலும் அதே ஆண்டில் அதே பெயரில் 'டப்'பாகி வெளியானது. 'ஜாலியாக யாரோ எந்தன் சொப்பன மயக்கத்தில்..' ராஜா ஜிக்கியின் இணைவில் ஒலித்த ஜாலியான பாடல். 'எழிலின்பப் பெண் கலையின்பம்  காணு'  கே.ராணி குழுவினரின் குரலில் நல்ல துள்ளிசைப்பாடல். இசை-அவினாஷ் வியாஸ்.
மகிபால் அனிதா குகா நடித்த Maya Bazaar[1958] புராணப்படம் 'வீர கடோத்கஜன்’ ஆக தமிழில் 1959 இல் விஜயம் செய்தது. சித்ரகுப்தாவின் இசையில் ராஜா-பி.சுசிலாவின் குரல் இணைவில் 'எழில் பொங்குமே பார்த்தாலே', 'எழில் ஓவியம் பார்த்தேனோ' -இரு பாடல்களுமே தென்றலின் குளுமை 
                         மஹிபால் கிரிஜாவுடன் இணை சேர்ந்த 'ஹனுமான் பாதாள விஜயம்' 1960 இல் திரைக்கு விஜயம் செய்தது'மாறன்தானோ தேரில் ஏறிப் பூங்கா வனமதில் வந்தானோ', 'நெஞ்சில் துள்ளும் உண்மை தெரிந்தாயா' - எஸ்.ஜானகியின் ஆரம்பகாலக் கொஞ்சும் குரல் கீதங்கள்.  S.N..திருப்பதியின் இசை;தமிழில் விஜயபாஸ்கர். பாடலாக்கம் குயிலன்.

ரஞ்சன், சித்ரா நடிப்பில் 1959 இல் ஹிந்தியில்  வெளியான Madari    'மன்னன் மகள்' ஆக அதே ஆண்டில் தமிழுக்கும் தாவியது. 'கண்ணோடு கண் பேசி உறவாடும் ..'  TMS, P.சுசிலா பாடிய இருகுரலிசைகீதம். இசை - கே.ஆனந்த்
                        வட இந்திய அஜித்துடன் நளினி ஜெயவந் நடித்து 1954 இல் 'நாஸ்திக்’ ஹிந்தியில் வெளியானது.  தமிழில் அதன் இசைத் தட்டுகள் 'நாஸ்திகன்' என்ற பெயரில்தான் வந்தன. 'மாநில மேல் சில மாந்தர்களால்  வரும் மாறுதல் பாரையா' திருச்சி லோகநாதனின் குரலில் சிந்தனையைத் தூண்டும் ஓர் உணர்ச்சிப் பாடல்.  C. ராமச்சந்திராவின் இசையில் குமாபாவின் வரிகள்.  என்ன காரணமோ தெரியாது 1962 இல்  தான் 'மடாதிபதியின் மகள்' ஆக அது தமிழில் வெளியானது.
                      1954 இல் ஹிந்தியில் வெளியான 'சம்ராட்' படத்துக்கும் அதே கதிதான்.அஜித், ரெஹானா நடித்த அப்படமும் தாமதமாக 1962 இல்  தான் 'காதல் பரிசு' என்ற தலைப்பில் '  Dub       ஆகி வந்தது. ஹேமந்தகுமாரின் இசையில் குமாபாவின் பாடல்கள்  T.A.'மோதி, லட்சுமி ஷங்கர் குரல்களில் தவழ்ந்தன. 'காதலாலே சாதல் கூட' , T.A. மோதி குழுவினர் வழங்கிய ‘கஸல்’ பாணிப் பாடல்.
             புத்தரின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட கதை 'அங்குலிமாலா'. பாரதபூஷன், நிம்மி நடித்த படம். அனில் பிஸ்வாஸ் இசையில் உருவாகி  'புயலுக்குப் பின்' எனத் தமிழில் 1961 இல் திரை கடந்தது.
Image result for Angulimaal                                               1944 இல் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'ரத்தன்'. [Jewel] நவ்ஷாத் அலி இசையமைத்து கரண் தேவாரியும் ஸ்வர்ணலதாவும் நடித்த படம்.  தமிழாக்கக் கதை-வசனம் ஒலித்தட்டுகளில் வெளிவந்துள்ளது. ஆனால்  மொழிமாற்றத்    திரைப்படம்  வெளியானதோ தெரியவில்லை!
[1962 வரையான காலப் பகுதியில் வந்த ஹிந்தி-தமிழ் மொழிமாற்றப் படங்கள் பற்றி மட்டுமே இக் கட்டுரையில் ஆய்வு செய்யப் பட்டது]

                                   
                                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹிந்தி - தமிழ் தழுவல் திரைப்படங்கள்

Image result for Anarkali 1953வெற்றி பெற்ற சில ஹிந்திப் படங்கள் 'டப் ' செய்யப்படாது மூலக் கதையைத் தழுவித் தமிழுக்கு உருமாறின. அவ்வாறாக முதன் முதலாக வெளியான தழுவல் படம் 'அசோக்குமார்'[1941]அதன் ஹிந்தி மூலம் 'வீர குணாள்'.
ரெஹ்மான்,உஷா கிரண் நடிப்பில் 1950   இல்  வெளியான ஹிந்திப் படமான 'ராஜ் ராணி'     [Raj Rani] தெலுங்கில் 'பரதேசி' எனவும் தமிழில் 'பூங்கோதை' எனவும்  அஞ்சலி பிக்ச்சர்ட்ஸின்  முதல் சமகாலத்  தயாரிப்பாக 1953 இல் வெளியானது.அஞ்சலிதேவியுடன் நாகேஸ்வரராவ் நடித்திருந்தார்  பிரதீப், பினாராய் நடிப்பில் 1953 இல் ஹிந்தியில் வெளியான காதல்  சித்திரம் 'அனார்கலி'யை அஞ்சலிதேவி, நாகேஸ்வரராவ் நடிக்க சி.ராமச்சந்திராவின் இசையையும் தனதாக்கிக் கொண்டு, அஞ்சலி பிக்சர்ஸ் ஆதி நாராயணராவ் 1955 இல்  தெலுங்கு-தமிழ் தயாரிப்பாக அதே பெயரில் வெளியிட்டார்.
Image result for Kismet 1943

மஹிபால், சசிகலா நடிப்பில் 1954  இல் ஹிந்தியில் வெளியான படம் Alibaba & 40 Thivesஅதே ஆண்டில் Modern Theatres   அதிபர் டி.ஆர்..சுந்தரம்  40 திருடர்களுடன் எஸ்.என்.திருப்பதியின் இசையில் அமைந்த பாடல்களையும் சத்தமின்றித் தமிழாக்கி விட்டார். MGR,  பானுமதி நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' தமிழ்ப் பதிப்புக்கு இசைஎஸ்.தட்ஷணாமூர்த்தி!  
 ஷியாம்,மதுபாலா நடிப்பில்  1952 இல் வந்த  Dulari   ஜெமினி, பத்மினி நடிப்பில் சில சிறிய மாற்றங்களுடன்  'ஆசை'யாக  1956 இல் வடிவெடுத்தது. கீதா பாலி நடித்த பாத்திரத்தில் தமிழில் நடித்தவர். ராஜசுலோசனா                                                                அசோக்குமார் இரட்டை வேடமற்ற முதல் திரைப்படமான ‘கிஸ்மத்'[ Kismath] 1943 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது.  தமிழில் 'பிரேம பாசம்' ஆக ஜெமினி, நம்பியார் நடிப்பில்  13  ஆண்டுகளின் பின் 1956 இல் தான் அது  வெளியானது.அசோக்குமார்,, திலீப்குமார், நர்கீஸ் நடிப்பில் 1951 இல் ஹிந்தியில் வெளியான Deedarகல்யாண்குமார், எஸ்.எஸ்.ஆர்., புஷ்பலதா நடிப்பில் 'நீங்காத நினைவு' ஆக 1963இல் தமிழில் பதிவானது. நௌஷாட்டின் இசையில் லதாவுடன் ஷம்ஷாட்பேகம் பாடிய பாடலின் மெட்டில் 'ஓ..சின்னஞ்ச சிறு மலரை மறந்து விடாதே' என ஒரு பாடல் சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் 12 ஆண்டுகளின் பின் மீண்டும் ஒலித்தது. [நீங்காத நினைவுக்கு இசையமைத்தவர்-கே.வி.மகாதேவன்.]
Image result for Anari
        அசோக் குமார்
, மீனாகுமாரி நடிப்பில் 1955 இல்  வெளியான Bandish  தமிழில் ஜெமினிசாவித்திரி நடிப்பில் 1957 இல் 'யார் பையன்?' ஆக அவதாரமெடுத்தது  ஹிந்தியில் நடித்த [சிறுவன்?] டெய்சி இரானியே தமிழிலும் அசத்தினாள். 1956 இல் 

Image result for Ek Hi Raasta 1956அசோக்குமார், மீனாகுமாரி நடித்த Ek hi rasta  ஜெமினி, சாவித்திரி நடிப்பில் 'புதிய பாதை' ஆக உருமாறி 1960  இல் தமிழில் நடை போட்ட்து. ராஜ்கபூர், நூடன் நடிப்பில்  1959  ஆம் ஆண்டின் வெற்றிச் சித்திரமான  Anari    ஜெமினி, சரோஜாதேவியின் நடிப்பில்  1964 இல் 'பாசமும் நேசமும்' கப் பரிணமித்தது. 
திலீப்குமார், நிம்மி நடிப்பில் 1952  இல் ஹிந்தியில் வெளியான Daag  ஆறுதலாக சிவாஜி, பத்மினி நடிப்பில் 1961 இல் தமிழில் 'புனர் ஜென்மம்'எடுத்தது   1958  இல் முதலிடம் பெற்ற- திலீப், வைஜயந்தி நடித்த - பிமல் ராயின் 'மதுமதி'யை கல்யாண்குமார், தேவிகா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' எனத் தந்தார் ஸ்ரீதர் 1963 இல்.
Image result for Miss Mary 1957மனோஜ்குமார், சாதனா நடித்த Won kaun Thi [1964]  தான், ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் 1966 இல்  தமிழில் வெளியான ‘யார் நீ?' மர்மப் படம்.  ஷம்மிகபூரின் 'பிரம்மச்சாரி[ 1968]   தான் சிவாஜி நடிப்பில்  1970  இல் 'எங்க மாமா'வானது. ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா டாகூர் நடித்த 'ஆராதனா'[ 1969] தான்    தமிழில்  'சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பில் 1974  இல்   வந்த  'சிவகாமியின் செல்வன்'
பின்னாட்களில் MGR நடித்த பல படங்கள் ஹிந்தி மூலப்படங்களின் தழுவல்களாகவே இருந்தன
அவற்றுட் சில -
‘ Phool Aur Patthar’ [1966]      ஜெமினி தயாரிப்பான 'ஒளி விளக்கு’ [1968]
சாந்தாராமின் '  Do Aan Khen Barath Haath’[1957]]    பல்லாண்டு வாழ்க [1975]
Ayee Milan Ki Bela[1964]                                                   ஒரு தாய் மக்கள் [1971]
Talash [1969]                                                                         ராமன் தேடிய சீதை [1972]                 Zanjeer [1973]                                                                      சிரித்து வாழ வேண்டும் [1974]
Yathon Ki Barath [1973]                                                       நாளை நமதே 1975]
Sachaa Thutha [1970]                                                            நினைத்ததை முடிப்பவன் [1975]
 Hum Shakal [1974]                                                                ஊருக்கு உழைப்பவன் 1976]

தமிழ் - ஹிந்தி  தழுவல்களும் சில மொழி மாற்றப் படங்களும்

Image result for Chandralekha 1948முதன் முதலாகத் தமிழில் இருந்து ஹிந்திக்குத் தமது 'சந்திரலேகா'வை அது தமிழில் வெளியான அதே1948    இல் 'சந்திரா'என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ஜெமினி வாசன்  வெளியிட்ட போது அதன் பிரமாண்டம்  வட இந்தியத் தயாரிப்பாளர்களை மிரள வைத்தது. வெற்றி வாசனுக்கு உத்வேகமளித்தது. தமிழகம் அவ்வளவாக கண்டுகொள்ளாத ரஞ்சனை வடக்குத் திரையுலகு வியந்து வரவேற்றது.வெற்றிக் களிப்புடன் தமது முன்னைய படைப்புகளையும் வடக்கில் சந்தைப் படுத்தினார் வாசன்.
                                  எம்.கே.ராதாவுக்குப் பதிலாக ரஞ்சனை இரட்டைவேடம் புனைய வைத்து’ Nishan’  என்ற பெயரில் தமது 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தை, தமிழில் வெளியான அதே 1949 இலேயேஹிந்தியிலும் வெளியிட்டு வெற்றிகண்டார். இரண்டிலும் நாயகி பானுமதிதான்.
Image result for Chandralekha 1948     1943  இல் ரஞ்சன் நடிப்பில் வெளியான 'மங்கம்மா சபதம்' தூசு தட்டப்பட்டு 1951இல் 'மங்களா'வாக வடக்குத் திரைவானில் மின்னியபோது வசுந்திராவுக்குப் பதிலாக பானுமதி ரஞ்சனுடன் மீண்டும் இணை சேர்ந்தார். ஜெமினியின் ‘சம்சாரம்' அது தமிழில் வெளியான 1951            இலேயே அதே நடிகர்களின் நடிப்பில் சுடச்ச்சுட ‘Sansar’ [  'சன்சார்'] ஆக மொழிமாற்றம் பெற்றது. ஜெமினியின் 1948 வெளியீடான 'மிஸ் மாலினி'1952  இல்            Mr.Sampath [ ‘மிஸ்ட்டர் சம்பத்]' ஆக உரு மாறிய போது கொத்தமங்கலம் .சுப்பு/புஷ்பவல்லிக்குப் பதிலாக மோதிலால்/ பதமினி பங்கேற்றனர்.
Image result for Raj Tilakஜெமினியின் 'வஞ்சிக்கோடடை  வாலிபன்' எவ்வித மாற்றமுமின்றி அது தமிழில் வெளியான அதே1958இலேயே 'ராஜ்திலக்ஹிந்தியிலும் வலம் வந்தான். 1959 இல் தமிழ் - ஹிந்தி என்ற வாய்ப்பாட்டை  வாசன் மாற்றிப் போட்டுப் பார்த்தார்.                            
Image result for Paigham                  1959 இல் திலீப்குமார், வைஜயந்தி மாலாவை வைத்து ஹிந்தியில் தாமெடுத்த’Paigamஎன்றதிரைப்படத்தின் தழுவலாக   சிவாஜி, வைஜயந்திமாலாவை  வைத்து 'இரும்புத்திரை'யை எடுத்து1960 இல் வெளியிட்டார். அதே போலவே 1963இல் ஹிந்தியில் தாம் தயாரித்த 'கிரஹஸ்தி' யை தமிழில் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை'யாக்கி 1966 இல் வெளிக் கொணர்ந்தார்.
  ஜெமினி வாசனைத் தொடர்ந்து   ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரும் ஹிந்தித் திரையுலகை முற்றுகையிடடார். தமிழில் 1949   இல் வெற்றிகண்ட அவரது ‘வாழ்க்கை' ஹிந்தியில் Bahar   ஆக மாற்றமுற்று 1951  இல் வெளியானது. வைஜயந்திமாலாவுடன்  T.R. ராமச்சந்திரனுக்குப் பதிலாக  கரன் திவாரி      என்ற நடிகர் கைகோத்தார். தமிழ் ;வாழ்க்கை' இரவல் மெட்டில் இனிதாக ஓடிய படம். 'காப்பி'யடித்தவர்களிடமே அதை ''போணி' பண்ணி மாட்டிக் கொள்ள செட்டியார் என்ன ஒண்ணும் தெரியாத மூணாம் கிளாஸா?ஹிந்தி இசைக்கு அங்கேயே ஆளைப்பிடித்தார். சங்கீத சாம்ராட் எஸ்.டி.பர்மன்-இசை!  பிரச்சனை தீர்ந்தது. வாசனுக்கு முன்னோடியாக தமிழ்-ஹிந்தி வாய்ப்பாட்டை  மாற்றிப் போட்டுப் பார்த்தவர் AVM தான்.ஹிந்தியில் வைஜயந்திமாலாலாவுக்கிருந்த வரவேற்பை மூலதனமாக்கி 1953இல்   பாரதபூஷன், கிஷோர்குமார் நடிப்பில் Ladki’  யை தயாரித்து  வெளியிட்டார். அடுத்த ஆண்டில் அதையே தமிழில்   வைஜயந்தியுடன் ஜெமினி,எஸ்.பாலச்சந்தர் நடிக்க 'பெண்’ணாக அவதாரம் எடுக்கச் செய்தார்
Image result for Ek Hi Raasta 1956

 TKS  சகோதரர்களின் நடிப்பில் 1954 இல்  வெற்றி  பெற்ற 'ரத்த பாசம்' திரைப்படத்தை அசோக் குமார், கிஷோர்குமார் சகோதரர்கள் நடிப்பில் ஹிந்தியில் 'பாய் பாய்'  என 1956  இல்  வெளியிடடார்.
அதே சூட்டொடு வங்காள  Banga Gara    ஜக் 'குலதெய்வம்’மாக்கி[ 1956]   ஹிந்தியில் அதையே சகஸ்ரநாமத்துக்குப் பதிலாக  பாலராஜ் சஹானியை, பண்டரிபாயுடன் நடிக்க வைத்து  1957      இல்’Bhabiஎன  வெளியிடடனர்  AVM   நிறுவனத்தினர்.

AVM இன் 'களத்தூர் கண்ணம்மா' [1960] Main Chap Rahungi’   ஆக 1962 இல் ஹிந்தியில் வெளியானது. ஜெமினியின் பாத்திரத்தில் சுனில் தத்தும் சாவித்திரியின் வேடத்தில் மீனாகுமாரியும் சிறுவன் கமலஹாசனிடத்தில் சிறுவன் பப்லுவும் பங்கேற்றார்கள்.                                                                               ஏவிஎம்  தயாரிப்பில் வெளியான மேலும் சில  தமிழ் - ஹிந்தி தழுவல் [Remake]படங்கள்

'மாமியார் மெச்சிய மருமகள்'[1959] [எஸ்.எஸ்.ஆர்.,எம்.என்.ராஜம்] -- Barkha[1960]      [ஜெகதீப், நந்தா]                                          
'அன்னை'[1960] [பானுமதி, ரங்காராவ்] Laadla[1966]  [நிருபராக,பால்றாஜ்சஹானி]                                                                             
'குமுதம்'[எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி][1961] –Pooja Ke Phool[1964][தர்மேந்திரா,மாலாசின்ஹா]                                                                                               'நானும் ஒரு பெண்'[1964] [எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி]   --Main Bhi Ladki Hoon[1964] [தர்மேந்திரா,மீனாகுமாரி] - இரண்டிலும் ரங்காராவ் பங்கேற்றார்.                                   'குழந்தையும் தெய்வமும்' [1963][ஜெய்ஷ்ங்கர், ஜமுனா] Do Kalyan[1968]  [பிஸ்வஜித், மாலா சின்ஹா]                                                                                                                                                     'சர்வர் சுந்தரம்'[1964][நாகேஷ்,கே.ஆர்.விஜயா]Main Sundar Hoon [1971] [மெஹ்முட், லீனா சந்தர்வர்கர்]


Image result for Chhoti Bahenஎஸ்.பாலச்சந்தர் பானுமதியுடன் நடித்து  இல் தமிழில் வெளியான ஜூபிட்டரின் 'ராணி'யும் பானுமதியுடன் அனுப்குமார் நடிக்க அதே பெயரில் 1952 இலேயே ஹிந்தியிலும் வெளியானது. MGR, E.V.சரோஜா நடிப்பில்  1952 இல் தமிழில் வெளியான 'என் தங்கை' ஏழு ஆண்டுகளின் பின் பால்ராஜ்  சஹானி, நந்தா நடிப்பில்  ‘ Chhoti Bahen’[1959]   ஆக ஹிந்தியிலும் வந்தது.
Image result for Amar Deep 1958 நான்கு மொழிகளில் சம காலத்தில் தயாரிக்கப்பட்ட பக்ஷிராஜாவின் 'மலைக்கள்ளன்'[1954] 'ஆசாத்' ஆக 1955  இல் ஹிந்தியில் பிரவேசித்தான். MGR, பானுமதி ஜோடியின் நடிப்பை திலீப்குமாரும் மீனாகுமாரியும் ஈடுசெய்தனர். சிவாஜி, சாவித்திரி நடித்த 'அமர தீபம்' [1956]               தேவானந்த், வைஜயந்திமாலா நடிப்பில் 'அமரதீப்’ பாக 1958 இல் ஹிந்தியில் வெளியானது. தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் ஹிந்தியிலும் பத்மினி நடித்தார்.                   

Image result for Nazrana 1961        
                                                                                                                                                                                             ஸ்ரீதரின் 'கல்யாணபரிசு'[1959]   ராஜ்குமார்சிவாஜிபத்மினி நடித்த 'எதிர்பாராதது' [  1954]   ராஜ்கபூர்,மீனாகுமாரி இணைவில்[Sharada] 'சாரதாஎனும் தலைப்பில் ஹிந்தியில் 1957 இல் வெளியானதுவைஜயந்திமாலா நடிப்பில் 'நஸ்ரானா' வாக 1961 இல் ஹிந்தியில்  சக்கை போடு போட்ட்து. அவரது 'நெஞ்சில் ஓர் ஆலயம்'[1961]              ‘தில் ஏக் மந்திர்' ஆகி  1963இல்  ராஜேந்திரகுமார், மீனாகுமாரி நடிப்பில் வடக்கிலும் கண்ணீர்  வெள்ளம் பெருகச் செய்தது.
Image result for Dil Ek Mandirரவிச்ச்சந்திரன்,காஞ்சனா நடிப்பில் உருவான ஸ்ரீதரின் வெற்றி பெற்ற நகைச்சுவைச் சித்திரமான 'காதலிக்க நேரமில்லை'[ 1965]  கிஷோர்குமார், மும்தாஜ் நடிப்பில் Pyar Kiye Jaa’      ஆக ஹிந்தியில் 1966  இல் வெளியானது.  கமல், ஜெயசித்ரா நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது'[1978]ராஜேஷ்கன்னா, ஜெயப்பிரதா நடிப்பில் ‘Dil E Nadaan’   ஆக 1982 இல் ஹிந்தியை முற்றுகையிட்டது.

Image result for Jhoola 1962                                      ஜெமினி - சரோஜாதேவி ஜோடி சேர்ந்து  கே.சங்கரின் இயக்கத்தில் உருவான 'கைராசி'  [1960 ] இரண்டு ஆண்டுகளின் பின் சுனில் தத், வைஜயந்திமாலா இணைவில் Jhoola’[1962]         வாக   ஹிந்தியில் காட்சி தந்தது.சிவாஜி, மாலினி நடித்த பந்துலுவின் 'சபாஷ் மீனா'[1958]  ஷம்மி கபூர், மாலா சிம்ஹா நடிக்க  1962 இல் ஹிந்தியில் Dil Tera Divana   ஆக வலம் வந்தது. சிவாஜி, சாவித்திரி நடித்த   'பெண்ணின் பெருமை' [1955] – Bahurani [1963] ஆகவும் சிவாஜி, பத்மினி நடித்த 'தெய்வப்  பிறவி'[1959], பால்ராஜ் சஹானி, பத்மினி  நடிப்பில் Bindya-[1960] ஆகவும் ஹிந்தியில் உருமாறின.
Image result for Rakhi 1962சிவாஜி,சாவித்திரி நடித்த 'பாச மலர்'[1959]  அசோக்குமார்,வஹிதா ரஹ்மான் நடிப்பில் 'ராக்கி' என 1962 இல் ஹிந்திக்குச் சென்று ரசிகர்களை உருக வைத்தது.தமிழில் தயாரிப்பாளராக உயர்ந்த வில்லன் நடிகர் வீரப்பா சிவாஜியை வைத் து தமிழில் 1962 இல்  வெற்றி  கண்ட 'ஆலயமணி'யை''ஆத்மீ' என ஹிந்தியில் பிரபலமான திலீப்குமாரை வைத்து எடுக்கப் போய் நொந்து நூலாகி ஒருவாறாக  1968  இல்  திரைக்கு கொணர்ந்தார்.                                                    MGR, கே.ஆர். விஜயா  நடித்த தேவரின் 'நல்ல நேரம் தமிழில் வெளியான 1971 லேயே ராஜேஷ் கன்னா, தனுஜா நடிப்பில் 'ஹாத்தி மேரே சாத்தி'யாக ஹிந்தியிலும் தயாராகி திரை கண்டது.
                     தெலுங்கில் NTR  இரடடை வேடமேற்று 'ராமுடு பீமுடு'வாக 1964 இல் வெற்றி பெற்ற சித்திரத்தைத் தமிழில் MGR  இன் 'எங்க விட்டுப் பிள்ளை'யாக்கி 1965 இல்  ஓடவிட் டார்கள். அதே கதையை திலீப்குமார், வஹிதா நடிப்பில் 'ராம் அவுர் ஷியாம்'ஆக மாற்றி 1967 இல் ஹிந்தியிலும் உலவ விட்டு மகிழ்ந்தனர்.
பானுமதி, என்.டி.ஆர். நடிப்பில் அவரது பரணி பிக்சர்ஸ் தயாரிப்பாக தெலுங்கில் இருந்து  'டப்'பாகி வந்த 'சண்டிராணி'அதே தலைப்பில், அது தமிழில் வெளியான அதே 1953 இல் மொழிமாறி ஹிந்திக்கும் சென்றது.
Image result for Miss Mary 1957தெலுங்கு-தமிழ் தயாரிப்பான 'மிஸ்ஸியம்மா'[ 1955]  'மிஸ் மேரி'யாக 1957இல் ஹிந்தியில் பிரவேசம் செய்த போது சாவித்திரிக்குப் பதிலாக மீனாகுமாரி ஜெமினியைக் கலாய்த்தார். இரண்டிலும் புதுமுகமாக ஜமுனா அறிமுகமானார்.
. 'கணவனே கண் கண்ட தெய்வம்' ஜெமினி, பத்மினியுடன் ஹிந்தி நடிகர்கள் பங்கேற்க சமகாலத் தயாரிப்பாக 'தேவதா'வாக தமிழில் வெளியான அதே 1955 இல் ஹிந்திக்கும் சென்றது.  லலிதா தமிழில் ஏற்ற வில்லி வேடத்தில் ஹிந்தியில் வைஜயந்திமாலா பிரகாசித்தார் தெலுங்கு-தமிழ் டப்பிங் படமான 'ஜெயசிம்ஹன்'னும் [ 1955] சமகாலத் தயாரிப்பான  'அலாவுதீனும் அற்புத விளக்கும்'[1958]  ஹிந்தியிலும் அதே ஆண்டுகளில் மொழி  மாற்றம் பெற்று வெளியாகின.
T.R.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி நடித்த 'அடுத்த வீட்டுப் பெண்’ [1960]'-Padosan [1968] ஆக ஹிந்தியில் உருமாறியது                                                                                                             ரங்காராவ்,ரோஜாரமணி நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற AVM  இன்  'பக்த பிரகலாதா'[1967 ] மொழிமாற்றம் பெற்று தமிழ், ஹிந்தி இரண்டிலும் அதே ஆண்டில் வெளியானது                                               

கன்னட-தமிழ் சமகாலத் தயாரிப்பான பந்துலுவின்  'எங்க குடும்பம் பெரிசு' கன்னடத்தில் இடம் பெற்றது போலவே 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரிலேயே ஹிந்தியிலும் தமிழில் வெளியான அதே 1958இலேயே மொழிமாற்றம் பெற்று வெளியானது

மொழி மாற்றம் பெற்று  வெளியான மற்றும் சில படங்கள் -



          MGR, அஞ்சலிதேவி நடித்த    மர்மயோகி [1951] -  Ek Tha Raja [1951]
          ஸ்ரீராம்,, வைஜயந்திமாலா  நடித்த 'மர்ம வீரன்' [1956]  ‘Piyamilan’[1958]
         சிவாஜி, பதமினி நடித்த                   'ராஜா ராணி' [1956] -  Aui Phirse Bahar’[1960]
         சிவாஜி, பத்மினி நடித்த 'உத்தம புத்திரன்'[1958] - Sitamagar[1958]
         சிவாஜி, ஜமுனா நடித்த  'தங்கமலை ரகசியம்'[1957] - Suhag [1958]
        சிவாஜி, பதமினி நடித்த 'வீர பாண்டிய கட்டபொம்மன்''-   ‘Amar Saheed’[1959]
       சிவாஜி, சாவித்திரி நடித்த   'காத்தவராயன்' [1958]                ‘Amar Prem’[1960]
       ரஞ்சன், அஞ்சலிதேவி நடித்த 'நீலமலைத்  திருடன்'[1968]-  ‘Matuala’[1958]
       MGR தயாரித்து நெறியாள்கை செய்து இரட்டை வேடமிட்டு நடித்த வெற்றிப் படைப்பான       'நாடோடி மன்னன்’  [1958] 1962 இல் Heme Bhe Jeene Do  என ஹிந்தி ரசிகர்களை                                வெற்றி கொள்ளச் சென்றது

                                                             ~~~~********************~~~~