Thursday, 31 December 2015

about me-thambattam







வேதாவின்வாவில்
எண்ணிய முடிதல் வேண்டும்,     நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,  தெளிந்த நல்லறிவு  வேண்டும்.
 முகப்பு       நாடகம்          சினிமா        திரையிசை          வானொலி / TV          தமிழ்           புனைவு               கதம்பம்



தம்பட்டம்
      '  முசுப்பாத்தி '    எனது வலைப்பூ.
ஈழத்து வடபுலம் எனது பிறப்பு.எழுத்தாளனாகத்
தடம் பதித்துக்  காலம் பல கடந்து விட்டது.
             நகைச்சுவையும்  நையாண்டியும்  எனது
எழுத்தின் பலங்கள். நக்கீரத்தனம்  எனது பல-வீனம்.
        இலங்கை வானொலி (வானம்பாடி,தென்றல்)
அறிவிப்பாளனாக, தொகுப்பாளனாக  'காலத்தால்
அழியாத கானங்கள்' தந்து மகிழ்ந்து-மகிழ்வித்து,
வானலைகளில் வலம் வந்த தொரு காலம்.
       ஆசிரியப் பணியிலும் வெள்ளிவிழாக் கண்டு
விடை பெற்றாயிற்று.
           அனுபவத்தில் முதியவன்; வலைப்பதிவில்  புதியவன்.
எனது அனுபவங்கள், ஆதங்கங்கள், ஆச்சரியங்கள்-
நான் கண்டவை-கேட்டவை-உண்டவை-உணர்ந்தவை-
கற்றவை-பெற்றவை-மற்றவை எனப் பல தரப்பட்ட(சு)வை
களையும் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாமென
விழைகிறேன்.
            உங்கள் மேலான கருத்துககள்/ஆலோசனைகள்/எதிர்வினை
களை வரவேற்கிறேன். ஆதரவு தந்தால் தொடருவேன்;                                       தராவிட்டாலும்விட மாட்டேன்.
                          என்றும் உங்கள் அன்பின்-
                                                                           வேதா/மறைமுதல்வன்